Sunday, April 12, 2020

எனது ஆச்சி பூவாய் அம்மாள்!

எனது வாழ்வில் தாத்தாவின் அருகாமையை உணர்த்து இல்லை!

ஆனால்...

எனது ஆச்சி (பாட்டி) யை பார்த்து இருக்கிறேன், சிறுவயதில்! ஆனால் நான் 3-4 வகுப்பு படிக்கும் போது  விடுமுறைக்கு  விருதுநகர் செல்லுவோம்,  அவர்கள் அவ்வளவாக நடமாடுவது கிடையாது; கட்டிலில் உட்கார்ந்து பேரப்பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என வேடிக்கை பார்ப்பது மட்டும் ஏதாவது தவறு செய்தால், "ஏய் அந்த குரங்கு படிக்கட்டில் ஏறி விளையாடுகிறான்டி" என சொல்லுவார்கள்! பெரியதாக ஈடுபாடு கிடையாது அவர்கள் மேல், அறியாத வயதில் நமது நன்மைக்குத்தான் அவர்கள் இதனை சொல்லுகிறார்கள் என புரியாத காரணத்தால்!

வருமானம் இல்லாமல்  தூத்துக்குடியில் எனது குடும்பம் கஷ்டபட்ட போது விருதுநகரில் இருந்து ஆச்சி 
எங்கள் வீட்டுக்கு வரும்போது ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகள் வாங்கி கொண்டு வருவார்கள்! அவர்கள் கொண்டு வந்த பொருள்கள் வீட்டில் உள்ள கயிற்று கட்டில் கீழ் பரப்பி வைத்து இருப்பார்களாம், எனது அய்யா (அப்பா) மதியம் சாப்பிட வீட்டுக்கு வரும்போது கட்டில் கீழ் மளிகை பொருள்கள் இருந்தாள் தனது மாமியார் வந்து இருக்கிறார், குழந்தைகள் சாப்பாட்டுக்கு அடுத்து சில வாரங்கள் பிரச்சினை இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விடுவேன் என எனது அய்யா பலமுறை நான் வளர்ந்த பிறகு சொல்லி பெருமை பட்டு இருக்கிறார்கள்! எனது ஆச்சி வர முடியவில்லை என்றால் விருதுநகரில் இருந்து  தூத்துக்குடி வரும் யாரிடமாவது மளிகை பொருள்களை கொடுத்து விடுவது பல முறை நடந்து உள்ளது.  அதே போல் எனது முத்த அக்கா திருமணத்திற்கு தேவையான நகையை கொடுத்து நடைவைத்தவர் அவர் என எனது தாய் தந்தை சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்!

இந்த பதிவு எனது ஆச்சி தனது மகளின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்ததை நினைவு கூறவே!!

Wednesday, November 14, 2018

பெங்களூர் காமிக்கான் - 2012

பெங்களூர் பிரசன்னாவின் பார்வையில்:

காமிக்கான் 2012-ல் முதன்முதலாக பெங்களூர் வந்தபோது நமது லயன்/முத்து ஸ்டால் போட்டார்கள், அது நடந்தது கோரமங்களவிலுள்ள இண்டோர் ஸ்டேடியத்தில். மறுபடியும் 2013-ல் அதே இடம் (இலவச அனுமதி இந்த இரு வருடங்களுக்கு இருந்தது) 
அதன் பிறகு,  நடைபெறும் இடத்தை மாற்றி, கட்டணம் கொடுத்தால் தான் அனுமதி என்று செய்துவிட்டார்கள்.
முதல் இரு வருடங்களும் நமது ஸ்டாலுக்கென வந்த நண்பர்கள்தான்.. 

லயன் ப்ளாக் அறிமுகமாகி மெல்ல மெல்ல பிரபலமடைந்த நேரம்.. அப்போதுதான் ப்ளாகில் எழுதும் பல நண்பர்களை நேராக கண்டுகொண்டு.. "ஓ.. ப்ளாகில் அந்த பேர்ல எழுதுறது நீங்கதானா..?" என்று ஒரு ஜாலியான அறிமுகம் மற்றும் அரட்டை நடந்தேறியது.. 

பிறகு, 2013-ல் சினிபூக்கின் பிரதான ஆங்கில மொழிபெயர்ப்பாளர் காமிக் கான் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.. அவரை நம் ஸ்டாலுக்கு வரவைத்து, நம் புத்தகங்களை அவரிடம் காண்பித்து நண்பர்கள் சிலரோடு பேசியது என பொழுது போனது..! 

But, அதிகபட்சம், அங்கே அமர் சித்ரா கதா ஸ்டால் மற்றும் காம்ப்பயர் காமிக்ஸின் ஸ்டால்கள் இருக்கும், அதை வேண்டுமானால் பார்த்துவிட்டு வரலாம். அவ்வளவே. மற்றபடி காமிக்கானில் புத்தகம் என்ற சமாச்சாரம் மிக மிக குறைவே. அவர்கள்  டீ ஷர்ட், மக், போஸ்டர்ஸ் என பல்வேறு காமிக் கதாபாத்திரங்களின் மூலமாக சந்தைப்படுத்துவதே அதிகம். பிறகு, காமிக் கதாபாத்திரங்களை போல வேஷம் போட்டு பலர் சுற்றிச்சுற்றி வருவார்கள் (cosplay), அதில் சிறப்பாக தோற்றமளிக்கும் சிலருக்கு பரிசு கொடுப்பார்கள். அவ்வளவே.. நண்பர் ஸ்ரீராம் லக்ஷ்மன் டெக்ஸ் வில்லர் வேடம் அணிந்து (மஞ்சள் சட்டை, துப்பாக்கி, தொப்பி சகிதம்) வந்தார்..! அந்த கெட் அப்பில், அங்கே வந்திருந்த பரணி அவர்களின் குழந்தையிடம் ஸ்டைல் காட்டி, அந்த குழந்தை  பயந்து அழுதது தனிக்கதை!

புகைப்படங்கள்:



























சென்னை புத்தகத்திருவிழா - மின்னும் மரணம் புத்தக வெளியீடு - ஏப்ரல் 2015